மொழிபெயர்த்த மெளனம்

'Man with a child' -by Xu man சொல், என்னிடம் பேச என்ன தயக்கம். சொல் ... நீ எப்போதாவது சிரித்தால் சொல். அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல். சிரி... சிரிப்போம். உன்னுடைய வருத்தங்களை பேசு புரியாத சோகங்களையும் . எதிர்பாராத நேரத்தில் உன் நெஞ்சடைப்பதென்னவென்று சொல். மனதுடைந்த நாட்களை மற நீ காதலினால் எழுதியன உரக்கப் படி. பயங்களைச் சொல் நீ பார்த்த அதிசயங்களைச் சொல் கதவடிக்கும் கோபங்களைச் சொல் ஆத்திரங்கள்,ஆர்வங்கள்,அழுகைகளைப் பகிர். பேச எதுவுமில்லையெனில் ? பாடு ,மெல்லிய குரலில். அல்லது குழந்தைகளுக்கு குளிப்பாட்டி,தலைசீவி சட்டை அணிவித்து விடு. அவர்களுடன் நடை பயில் இப்படியாக எதுவும் செய்த பின் தூங்கிப்போ சூரியனுக்கு முதுகைக் காட்டியபடி. (2001/திண்ணை )

பகவதியில் இருந்து பகவதி வரை

(ஜெயமோகனின் 'செய்தி' சிறுகதை குறித்த வாசிப்பு அனுபவம் ) /அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு// ஒரு இளைஞனின் அகத்தில் அவனை அறியாமல் காமம் கிளர்வதை இயல்பாக சொல்லிப்போகும் கதை . இதை காமம் என்று சொல்வதே கூட மிகததட்டையான ஒரு வார்த்தைதான் .ஒரு சிலையின் எடைக்கு... Continue Reading →

விக்ரமாதித்யன்

சுமைதாளாது முறிந்ததென் அச்சு பால் விஷமானது போலென் இருப்பு கர்ணனைக் கொன்றதுபோல கொல்கிறார்கள் என்னையும். - விக்ரமாதித்யன் Unable to bear the weight - broke , my axle. Like milk turning to poison - I exist. They're killing me like they killed Karna. -Vikramadhityan

What sort of

Gnanakoothan Someone walked towards me As if wanting to enquire about something Perhaps it’s about A shop ? A House ? A Hall ? Or a Temple even ? As I stood there wondering What he is going to ask Almost opening his mouth, to talk He simply passed by me – In silence. See... Continue Reading →

மேகம் திறந்துகொண்டு

ஏற்கனவே புகழ் பெற்ற பாடல்களை கவர் செய்கிறேன் ரிப்ரைஸ் செய்கிறேன் என்று வரும் பெரும்பாலான பாடல்களின் சொதப்பலை பார்த்து நொந்து போயிருக்கும் தருணங்களில் இது போன்ற பாடல்களை கேட்கக்கிடைப்பது அப்படியே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது. ஏற்கனவே வெட்டி செதுக்கப்பட்ட வைரத்தை மேலும் மிளிரச்செய்வேன் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.அந்த படைப்பின் ஜீவனுக்குள் முதலில் போக வேண்டும் பின் அதில் ஒரு கலைஞனாக உணரும் இன்ஸ்பிரேஷனை கொண்டு பாடலை அதன் மைய அழகியல் குலையாமல் ,... Continue Reading →

சுயாதீன தரப்பு

இந்த ஒரு வருடத்தில் தமிழக நிகழ்வுகளையும் அது குறித்த பேஸ்புக் விவாதங்களையும் தொடர்ந்து கவனித்து வந்ததில் ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது . தமிழ் நாட்டில் கலை , இலக்கியம் , கல்வி , மொழி , இசை , சினிமா , சிந்தனை , அரசியல் , ஆடு, மாடு, கோழி என்று எதை எடுத்துக்கொண்டாலும் அந்த தளத்தில் முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் இறுதியாக இரண்டு தரப்பாக பிரிந்து நிற்பதையே பார்க்கிறேன் . ஒருபுறம் திமுக ஆதரவு நிலைப்பாடு... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑