முள்ளை முள்ளால்

குத்தி

நுழைந்து

முறிந்து

குருதி மாந்தியபடியே

கிடந்து

அழுந்தி

புண்ணும்

சீழும்

வாதையுமாய்த்

துயர் தரும்

முள்ளும்,

அம் முள்ளைக்

குத்திக்

கிளர்த்தி

வெளிக்கொணர்ந்து

துயராற்றத் துடிக்கும் முள்ளும்

ஒன்றாமோ?

-தேவதேவன்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑