(போன வருடம் இதே நாள் எழுதிய பதிவு ) நேற்று மோடி அவர்கள் ஆற்றிய உரை கேட்டேன் , வழக்கமான சுற்றி வளைத்தல்களை தாண்டி நேரே "ஆத்மநிர்பர்" அறிவிப்புக்கு போய் விட்டேன். உரை ஆரம்பித்து 18 நிமிடம் கழித்து தான் மேட்டரே வருது , நல்ல வேளை யூடியிபில் ஒரு புண்ணியவான் நேரே இங்கே போ என்று டைம் ஸ்டாம்மையே கொடுத்துவிட்டார். முதலில் நல்ல விஷயம் Better late than never என்னும் அளவில் இந்த அறிவிப்பு... Continue Reading →
உணவும் மதமும்
Photo credit:Ay.Ashok Saravanan சமீபத்தில் ஒரு ஜைன உணவகத்தில் 'இங்கு முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை' என்று ஒரு போர்டை வைத்திருந்தது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது.அது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்தன . முஸ்லிம்களின் ஹலால் (Halal) உணவு என்ற வகைப்பாடு அடிப்படையில் உணவு சம்பந்தமானது அதை யார் தயார் செய்கிறார்கள் என்பது குறித்ததல்ல . யூதர்களின் கோஷர் (kosher) உணவும் அப்படியானதே , என்ன உணவு சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதான வரையறைதான்... Continue Reading →
‘அறமென்ப …’
ஜெயமோகன் அவர்களின் 'அறமென்ப..' சிறுகதை குறித்த வாசக குறிப்பு அறமென்ப சிறுகதை பிற கதைகளை காட்டிலும் மிகவும் நேரடியானது , வாசிக்க எளிமையானது அதனாலேயே மேலோட்டமான வாசிப்பில் சீண்டலாக தோன்றுவது . சிலருக்கு ஏழைகளை அவமானப்படுத்துவதாக தோன்றலாம் சிலருக்கு நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தோன்றலாம் . ஆனால் இது ஒரு நேரடியான சமூக விமர்சன கதை அல்ல என்று நினைக்கிறேன். கதைக்களனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ரோட்டில் அடிபட்ட கிடக்கும் ஒருவரை காப்பாற்றுதல்" நமக்கு மிகவும்... Continue Reading →
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே ..
தாத்தா அளவுக்கே அந்த ஹார்மோனியத்துக்கு வயதிருக்கும் போல , ஆனால் என்ன அற்புதமான வாசிப்பு . தன்னுள் எஞ்சி இருக்கும் அத்தனையையும் ஒன்றுதிரட்டி இந்த வாசிப்புக்கு அளிப்பது போல தோன்றியது .பாடலின் முதலில் ஆரம்பிக்கும் புல்லாங்குழல் இசையை ஹார்மோனியத்தில் கொண்டு வரும் போதே , அடடே போட வைத்துவிடுகிறார் . இந்தப் பாடலில் வெளிப்படும் TMS குரலின் கம்பீரத்தையும் புல்லாங்குழலின் கனிவையும் ஒருசேர தன் வாசிப்பில் தவழவிடுகிறார். 1:00 லிருந்து 1:30 வரை முதல் இண்டர்லூட் கேட்டுப்பாருங்கள்... Continue Reading →
இலவச பயணமும் பெண்களும்
ஒட்டு மொத்த பொது போக்குவரத்தில் பேருந்து இணைப்புகளை 'கடைசி கண்ணி' என்று சொல்வார்கள் அதாவது last mile connectivity .பொது போக்குவரத்தில் அதிகமாகவும் அன்றாடமும் பயன்படுத்தப்படுவது இந்த 'இறுதி மைல்' தொடர்பே .பெரும்பாலான நம் அன்றாட பயணங்கள் ஒரு 50-100 கிலோமீட்டருக்கும் நிகழ்த்தப்படும் பயணங்களாகவே இருக்கும்.இதை பூர்த்தி செய்ய பேருந்துகளை விட சிறப்பான ஒரு வழி இல்லை என்று தான் சொல்லவேண்டும் அமெரிக்க நகரங்கள் கார்களை மையமா வைத்து வடிவமைக்கப்பட்டவை என்பார்கள் , அது உண்மை தான்... Continue Reading →
‘C/o Kancharapalem’
வித்தியாசமான தெலுங்கு படம் ஒன்று , 2018 ல் எடுக்கப்பட்டது ,சமீபத்தில் தான் பார்த்தேன் . வித்தியாசம் என்றால் வழக்கமான கமர்சியல் தெலுங்கு படங்கள் போலும் இல்லாமலும் அதே சமயம் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று மெனக்கெடாமலும் எடுக்கப்பட்ட படம் . ஆந்தாலஜி வடிவிலான கதை . நான்கு இழைகளாக சொல்லப்பட்ட காதல் கதைகள் , இறுதியில அவை மிக அழகாக முடிச்சிடப்பட்டிருக்கும் .இவைகளை காதல் கதைகள் என்று சொல்வது கொஞ்சம் தட்டையான விளக்கம் தான்... Continue Reading →