வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே ..

தாத்தா அளவுக்கே அந்த ஹார்மோனியத்துக்கு வயதிருக்கும் போல , ஆனால் என்ன அற்புதமான வாசிப்பு . தன்னுள் எஞ்சி இருக்கும் அத்தனையையும் ஒன்றுதிரட்டி இந்த வாசிப்புக்கு அளிப்பது போல தோன்றியது .பாடலின் முதலில் ஆரம்பிக்கும் புல்லாங்குழல் இசையை ஹார்மோனியத்தில் கொண்டு வரும் போதே , அடடே போட வைத்துவிடுகிறார் . இந்தப் பாடலில் வெளிப்படும் TMS குரலின் கம்பீரத்தையும் புல்லாங்குழலின் கனிவையும் ஒருசேர தன் வாசிப்பில் தவழவிடுகிறார். 1:00 லிருந்து 1:30 வரை முதல் இண்டர்லூட் கேட்டுப்பாருங்கள்... Continue Reading →

இலவச பயணமும் பெண்களும்

ஒட்டு மொத்த பொது போக்குவரத்தில் பேருந்து இணைப்புகளை 'கடைசி கண்ணி' என்று சொல்வார்கள் அதாவது last mile connectivity .பொது போக்குவரத்தில் அதிகமாகவும் அன்றாடமும் பயன்படுத்தப்படுவது இந்த 'இறுதி மைல்' தொடர்பே .பெரும்பாலான நம் அன்றாட பயணங்கள் ஒரு 50-100 கிலோமீட்டருக்கும் நிகழ்த்தப்படும் பயணங்களாகவே இருக்கும்.இதை பூர்த்தி செய்ய பேருந்துகளை விட சிறப்பான ஒரு வழி இல்லை என்று தான் சொல்லவேண்டும் அமெரிக்க நகரங்கள் கார்களை மையமா வைத்து வடிவமைக்கப்பட்டவை என்பார்கள் , அது உண்மை தான்... Continue Reading →

‘C/o Kancharapalem’

வித்தியாசமான தெலுங்கு படம் ஒன்று , 2018 ல் எடுக்கப்பட்டது ,சமீபத்தில் தான் பார்த்தேன் . வித்தியாசம் என்றால் வழக்கமான கமர்சியல் தெலுங்கு படங்கள் போலும் இல்லாமலும் அதே சமயம் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று மெனக்கெடாமலும் எடுக்கப்பட்ட படம் . ஆந்தாலஜி வடிவிலான கதை . நான்கு இழைகளாக சொல்லப்பட்ட காதல் கதைகள் , இறுதியில அவை மிக அழகாக முடிச்சிடப்பட்டிருக்கும் .இவைகளை காதல் கதைகள் என்று சொல்வது கொஞ்சம் தட்டையான விளக்கம் தான்... Continue Reading →

அறுவடை நாள்

அறுவடை நாளில் சிரம் பிழைத்துக் கிடக்கும் நெற்கதிர் குறித்த பிரமிளின் அபாரமான கவிதை ஒன்றை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் பகிர்ந்திருந்தார் . மலை துளைத்து செல்லும் ரயில் வெளிவருகையில் நம் கண்களில் பட்டு கூசும்பொன் வெய்யிலை போன்ற கவிதை ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும் அறுவடை வயல்வெளியில் ஏதோ ஒரு ஆள் நிழல் மிதிக்க மடங்கி சிரம் பிழைத்துக் கிடந்து அறுவடை முடிய ஆட்கள் நகர மெல்ல வளைந்தெழுந்து தனித்து நாணிற்று ஒரு கதிர் உச்சியில் ஒரு நெல் சுற்றிலும் வரப்பு நிழல்களின் திசை நூல்கள் இன்று நிழல் நகரும் நாளை உதயம் உனக்கும் நாணத் திரை நகரும் உயிர் முதிரும் உன் கூந்தலின் உமி நீக்கி வெடித்தெழும் வெண் முகம் ஓர்... Continue Reading →

அம்பேத்கரின் வரலாற்று பார்வை

Egalitarians அமைப்பின் சார்பாக அம்பேத்கர் குறித்து ஜெ ஆற்றியிருக்கும் இந்த உரை முக்கியமானது . பெரும் ஆளுமைகளை நாம் பொதுவாக ஒருவாறு சுருக்கி திரட்டி வலுவான ஒற்றை அடையாளமாக ஆக்கிக்கொள்வது இயல்புதான் . காந்தி என்றால் அகிம்சை , போஸ் என்றால் வீரம் என்பது போல . ஒருவர் முக்கியமாக எதற்காக நின்றார் ,எதில் சிறந்து விளங்கினார் , எதற்காக பாடுபட்டார் எவ்விதம் வெளிப்பட்டார் என்பது ஒரு ஒற்றை அடையாளமாக இருக்கும்போது தான் அதன் மூலம் பெரும்... Continue Reading →

ஃப்ரித்ஜாஃப் ஷூவான்

Frithjof Schuon மெய்யியலை தத்துவார்த்த ரீதியாக இரண்டு விதமான அணுகுமுறைகளாக வகுப்பார்கள் perennial and traditonal . அதாவது ஏதாவது ஒற்றை மரபை மட்டுமே முழுதுமாக பின்பற்றி அதன் மூலம் மெய்யியல் சாரத்தை அடைவது , உதாரணமாக இந்து அல்லது இஸ்லாம் அல்லது கிருத்துவம் என்று ஏதோ ஒரு ஒற்றை மரபை மட்டுமே தேர்ந்தெடுத்து முன்செல்வது - இது மரபான மெய்யியல் . அப்படி இல்லாமல் மெய்மையை சாத்தியமான அத்தனை முறைகள் மற்றும் வழிகளில் இருந்து திரட்டி... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑