சொல்நிரம்பிய கலம்

"சொல்லே உடலில் வாழும் அனல் என்பது வேதாந்த மரபு. சொல்லப்படாத சொற்களெல்லாம் அனலாக எரியும். காதலில் உறவில் அன்பில் பகைமையில் சொல்லப்படாத சொற்கள். எத்தருணத்திலும் சொன்ன சொற்களைவிட சொல்லப்படாதவையே மிகுதி. அவை மானுடனின் உள்ளே நிறைந்துள்ளன. மானுடன் சொல்நிரம்பிய கலம்." -ஜெ ( சிவம் சிறுகதை)

20 லட்சம் கோடிகள் – எப்படி செலவளிக்கலாம் ?

(2020 மே மாதம் இந்திய அரசு கொரோனா பரவலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவி திட்டம் குறித்து எழுதியது ) முந்தைய பதிவு ஒன்றில் கொரோனா பாதிப்புக்கு உதவியாக அரசு அறிவித்திருக்கும் நிதித்தொகுப்பு நல்ல விஷயமே என்றும் ஆனால் அது எவ்வாறு செலவு செய்யப்படப் போகிறதோ என்ற என் ஐயங்களையும் , அச்சங்களையும் பதிவு செய்திருந்தேன்.அதை ஆமோதிக்கும் விதமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு அமைந்திருக்கிறது இது குறித்து வெறுமனே ஆலோசனைகளை சொல்லாமல் யாராவது ஒரு... Continue Reading →

கருப்பு பொட்டிட்ட மஞ்சள் பூசணிகள்

பெரிதும் அறியப்பட்ட சமகால ஜப்பானிய கலைஞரான யயோய் குஸாமாவின் ( Yayoi Kusama ) கலை உருவாக்கத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.தற்போது ஆஸி தலைநகரான கான்பராவில் , ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது .Experiential Art வகையில் வரும் இந்த‘கலை நிறுவல்’ பார்வையாளர்கள் இடையே மிகவும் பிரபலம் போலிருக்கிறது, வரிசையில் நின்று காத்திருந்து பார்க்கிறார்கள். அதே காலரியில் தான் மொனேவும் , ஜாக்ஸன் பொலாக்கும் இருக்கிறார்கள் . மொனேவின் ‘நீர் ஆம்பல்களின்’ முன் அமர்ந்திருந்து... Continue Reading →

பீஸ் லாக் கரோர் !

(போன வருடம் இதே நாள் எழுதிய பதிவு ) நேற்று மோடி அவர்கள் ஆற்றிய உரை கேட்டேன் , வழக்கமான சுற்றி வளைத்தல்களை தாண்டி நேரே "ஆத்மநிர்பர்" அறிவிப்புக்கு போய் விட்டேன். உரை ஆரம்பித்து 18 நிமிடம் கழித்து தான் மேட்டரே வருது , நல்ல வேளை யூடியிபில் ஒரு புண்ணியவான் நேரே இங்கே போ என்று டைம் ஸ்டாம்மையே கொடுத்துவிட்டார். முதலில் நல்ல விஷயம் Better late than never என்னும் அளவில் இந்த அறிவிப்பு... Continue Reading →

உணவும் மதமும்

Photo credit:Ay.Ashok Saravanan சமீபத்தில் ஒரு ஜைன உணவகத்தில் 'இங்கு முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை' என்று ஒரு போர்டை வைத்திருந்தது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது.அது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்தன . முஸ்லிம்களின் ஹலால் (Halal) உணவு என்ற வகைப்பாடு அடிப்படையில் உணவு சம்பந்தமானது அதை யார் தயார் செய்கிறார்கள் என்பது குறித்ததல்ல . யூதர்களின் கோஷர் (kosher) உணவும் அப்படியானதே , என்ன உணவு சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதான வரையறைதான்... Continue Reading →

‘அறமென்ப …’

ஜெயமோகன் அவர்களின் 'அறமென்ப..' சிறுகதை குறித்த வாசக குறிப்பு அறமென்ப சிறுகதை பிற கதைகளை காட்டிலும் மிகவும் நேரடியானது , வாசிக்க எளிமையானது அதனாலேயே மேலோட்டமான வாசிப்பில் சீண்டலாக தோன்றுவது . சிலருக்கு ஏழைகளை அவமானப்படுத்துவதாக தோன்றலாம் சிலருக்கு நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தோன்றலாம் . ஆனால் இது ஒரு நேரடியான சமூக விமர்சன கதை அல்ல என்று நினைக்கிறேன். கதைக்களனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ரோட்டில் அடிபட்ட கிடக்கும் ஒருவரை காப்பாற்றுதல்" நமக்கு மிகவும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑