பகவதியில் இருந்து பகவதி வரை

(ஜெயமோகனின் 'செய்தி' சிறுகதை குறித்த வாசிப்பு அனுபவம் ) /அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு// ஒரு இளைஞனின் அகத்தில் அவனை அறியாமல் காமம் கிளர்வதை இயல்பாக சொல்லிப்போகும் கதை . இதை காமம் என்று சொல்வதே கூட மிகததட்டையான ஒரு வார்த்தைதான் .ஒரு சிலையின் எடைக்கு... Continue Reading →

தேவதச்சன்

Sketch by Tessa Jannetty தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய் நிற்கிறாள் சிறுமி கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள் சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன அவள் கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்றன வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள் சொல்லவிரும்பிக் கை அசைத்தாள் சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை.  -தேவதச்சன் 

திருவோடு

திருவோடு ஏந்தி தெருவழியே போனால் சோறுதான் விழும்; வேட்டி விழலாம்; ஒதுங்கிக் கொள்ள திண்ணையில் இடமும் தருவார்கள்; நீ கேட்பது போல் ஒருபோதும் மலர் விழுவதில்லை.‍ -பிரதீபன்

ஊழ்கத்தில் அமரும் பறவை

அந்த குருவிகள் சிறகு முளைத்து பறந்துபோய்விட்ட ஒரு கணத்தில் ஏதோ ஒரு வகையில் ஜெ எழுதிவரும் சிறுகதைகளுக்கும் ஒருவித கவித்துவ பூரணம் வந்து விட்டதாய் உணர்ந்தே. அதே போல ஜெ இன்று 69 சிறுகதைகளுக்குப் பின் இந்த தீவிர படைப்பு பாய்ச்சலின் நிறைவை அறிவித்திருக்கிறார். கதைகள் முடிந்துவிடவில்லை ஆனால் அவைகளை எழுதுவதை முடித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் .  வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்த கதைகள் வெவ்வேறு களங்களாக , வெவ்வேறு வடிவங்களாக , வெவ்வேறு உலகங்களாக தோன்றலாம் அனால் எழுத்தாளருக்கு... Continue Reading →

முள்ளை முள்ளால்

குத்தி நுழைந்து முறிந்து குருதி மாந்தியபடியே கிடந்து அழுந்தி புண்ணும் சீழும் வாதையுமாய்த் துயர் தரும் முள்ளும், அம் முள்ளைக் குத்திக் கிளர்த்தி வெளிக்கொணர்ந்து துயராற்றத் துடிக்கும் முள்ளும் ஒன்றாமோ? -தேவதேவன்

எம்.கோவிந்தன்

எம்.கோவிந்தன் "கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தை தனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.' மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑