
சொல், என்னிடம்
பேச என்ன தயக்கம்.
சொல் …
நீ எப்போதாவது சிரித்தால் சொல்.
அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல்.
சிரி…
சிரிப்போம்.
உன்னுடைய வருத்தங்களை பேசு
புரியாத சோகங்களையும் .
எதிர்பாராத நேரத்தில் உன் நெஞ்சடைப்பதென்னவென்று சொல்.
மனதுடைந்த நாட்களை மற
நீ காதலினால் எழுதியன உரக்கப் படி.
பயங்களைச் சொல்
நீ பார்த்த அதிசயங்களைச் சொல்
கதவடிக்கும் கோபங்களைச் சொல்
ஆத்திரங்கள்,ஆர்வங்கள்,அழுகைகளைப் பகிர்.
பேச எதுவுமில்லையெனில் ?
பாடு ,மெல்லிய குரலில்.
அல்லது குழந்தைகளுக்கு குளிப்பாட்டி,தலைசீவி சட்டை அணிவித்து விடு.
அவர்களுடன் நடை பயில்
இப்படியாக எதுவும் செய்த பின்
தூங்கிப்போ
சூரியனுக்கு முதுகைக் காட்டியபடி.
(2001/திண்ணை )
Leave a Reply